Monday, May 20, 2024
Home » பறிமுதல் செய்யப்பட்ட 55 கற்சிலைகள் விலை மதிப்பற்றவை… எந்த கோவிலுக்கு சொந்தமானவை என விசாரணை : டிஜிபி சைலேந்திரபாபு

பறிமுதல் செய்யப்பட்ட 55 கற்சிலைகள் விலை மதிப்பற்றவை… எந்த கோவிலுக்கு சொந்தமானவை என விசாரணை : டிஜிபி சைலேந்திரபாபு

by Porselvi

சென்னை : சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள ஒருவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.பறிமுதல் செய்யப்பட்ட கற்சிலைகள் சென்னை அசோக் நகரில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு,”சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள ஒருவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.இதில் பாதி சிலைகள், சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடமிருந்து பெறப்பட்டதாக விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட கற்சிலைகள் விலை மதிப்பற்றவை. கற்சிலைகள் என்றாலும் பழமையானவை என்பதால் இவை பல கோடி மதிப்புடையவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிலைகளில் வட இந்திய மொழிகளில் எழுத்துக்கள் உள்ளன.எனவே இவை தென்னிந்தியாவை சேர்ந்ததா அல்லது வட இந்தியாவை சேர்ந்ததா என ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த கற்சிலைகள் எந்த கோவிலுக்கு சொந்தமானவை என கண்டறியப்பட்டு உரிய கோவில்களில் ஒப்படைக்கப்படும்.தமிழ்நாட்டில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட இருந்த அனுமன் சிலையையும் போலீசார் மீட்டு சென்னை கொண்டு வந்துள்ளனர். அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்ட அனுமன் சிலை உரிய கோவிலில் ஒப்படைக்கப்படும்.

இதுவரை அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 13 சிலைகள் கோவில்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.பறிமுதல் செய்யப்பட்ட மேலும் சில சிலைகள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டுள்ளன. 1,541 சிலைகளை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கடந்த 2 ஆண்டுகளில் மிகவும் பழமை வாய்ந்த 97 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக கோவில்களில் சிலைகள் கடத்தப்படுத்தவை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

twenty − 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi