Friday, May 10, 2024
Home » கலவை- வாழைப்பந்தல் நெடுஞ்சாலையில் மரங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரிப்பு

கலவை- வாழைப்பந்தல் நெடுஞ்சாலையில் மரங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரிப்பு

by Lakshmipathi

*தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்

கலவை : கலவை- வாழைப்பந்தல் நெடுஞ்சாலையில் உள்ள மரங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். இதை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கலவை -வாழைப்பந்தல் நெடுஞ்சாலையில் உள்ள புளியமரம், பனைமரங்கள் உள்ளது. இந்த மரங்களுக்கு மர்ம நபர்கள் நேற்று தீ வைத்துள்ளனர். இதில் தீ மள மளவென பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. இதை பார்த்த அப்பகுதியினர் வேம்பி கிராமம் நெடுஞ்சாலையில் புளியமரம் பனை மரங்கள் தீப்பிடித்து எரிவதாக தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பாஸ்கரன், தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சு அடித்து தீயை அணைத்தனர். மரங்களுக்கு தீ வைத்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கலவை-வாழைப்பந்தல்மற்றும் திமிரி நெடுஞ்சாலையில் உள்ள புல் புதர்கள் உள்ளிட்ட பல்வேறு மரங்களை மர்ம நபர்கள் கடந்த 10 நாட்களாக தீ வைத்து கொளுத்தி விட்டு செல்கின்றனர். இதை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர். இது தொடர்கதையாக உள்ளது. எனவே இதுபோன்று மரங்களை தீயிட்டு எரிப்பதை கண்காணித்து தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

4 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi