சென்னை: பாமக தலைவர் அன்புமணி டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் தென்பெண்ணை ஆற்றில் வரலாறு காணாத வகையில் வேதி கழிவுகளின் நுரைகள் கலந்து வருவது கவலையளிக்கிறது. காவிரியும் தென்பெண்ணையும் கர்நாடகத்தின் கழிவுநீர் சாக்கடையாக மாற்றப்படுவதை தமிழக அரசு இனியும் அனுமதிக்கக் கூடாது. . கழிவுநீர் கலப்பால் பல்வேறு தரப்பினருக்கும் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய கர்நாடகத்திடம் இருந்து இழப்பீடு வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.