கோவை: கோவை மாவட்டம் சிக்காரம்பாளையத்தில் உருளைக்கிழங்கு சிப்ஸ் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்துள்ளது. தொழிற்சாலையில் பராமரிப்பு பணியின்போது அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட உடனேயே தொழிற்சாலை சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்கள், உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் வாயு கசிவை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.