சென்னை: கோவை சிறையில் வார்டன்களால் தாக்கப்பட்ட 7 கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறையில் கைதிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த மருத்துவ அறிக்கையை நாளையே தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவகங்கையை சேர்ந்த தினேஷ் என்பவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள தினேஷின் தாய் செங்கையம்மாள் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.