கோவை: கோவை மாவட்டம் நீலாம்பூரில் அனுமதியின்றி செயல்பட்ட சங்கமித்ரா ஒட்டகம், குதிரை பண்ணையை மூடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக ஒட்டகத்தை மணிகண்டன் அடித்து துன்புறுத்தியதாக எழுந்த புகாரை அடுத்து தமிழ்நாடு விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். ஆய்வில் ஒட்டகங்கள், குதிரைகள் மற்றும் கழுதைகள் மோசமான நிலையில் இருந்ததை அடுத்து அவை மீட்கப்பட்டன. விலங்குகளை முறையாக பராமரிக்காத மணிகண்டன் மீது பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.