கோவை மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட அறிவியல் பூங்கா பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நமக்கு நாமே திட்டத்தின் மூலம் மக்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளபடுகின்றன.