கோவை: கோவை மதுக்கரை அருகே தங்க நகை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில் அறுவடை நகர் அடுத்த விவேகானந்தா சதுக்கம் பகுதியில் தங்க நகை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த புதூர் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.