டெல்லி : நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்க அமைக்க ஏலம் விடுவதை தடுக்க வேண்டும் என்றும் திமுக வலியுறுத்தி உள்ளது. திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி உள்ளார்.