சென்னை: கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. 2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்து இயக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. இன்று மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்து உள்ளனர் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார்.