Saturday, July 27, 2024
Home » தேவாலயத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய மாவட்ட வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தேவாலயத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய மாவட்ட வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

by Arun Kumar

மதுரை: தேவாலயத்தில் இறந்து போன நபரின் உடலை அடக்கம் செய்ய மாவட்ட வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்கலாம் என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு செயின்ட் மைக்கேல் தேவாலயத்தில் ஏற்பட்ட தகராறில் சேவியர் குமார் என்பவர் உயிரிழந்தார். உயிரிழந்த சேவியர் குமாரின் உடலை தேவாலய வளாகத்தில் அடக்கம் செய்ய வேண்டும் எனக் கூறியதால் சர்ச்சை ஏற்பட்டது.

சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் தேவாலயத்தில் யாரையும் அடக்கம் செய்யக்கூடாது என மனுத் தாக்கல் செய்யப்பட்டது. தேவாலயத்திற்கு சொந்தமான பொது கல்லறை தோட்டத்தில் சேவியர் குமாரின் உடலை அடக்கம் செய்ய உத்தரவு அளித்தனர். சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் கன்னியாகுமரி எஸ்.பி. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. இறுதிச் சடங்கில் உறவினர்கள் கலந்து கொள்ள விரும்பினால் காவல்துறை அனுமதிக்கலாம் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

You may also like

Leave a Comment

sixteen − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi