ஆலந்தூர்: சோழிங்கநல்லூர் தொகுதி நிதியில் இருந்து ரூ.1.10 கோடியில் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பணியை எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் துவக்கி வைத்தார். பெருங்குடி 14வது மண்டலத்துக்கு உட்பட்ட பெருங்குடி, பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மடிப்பாக்கம் சென்னை பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்ட சோழிங்கநல்லூர் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.1 கோடியே 10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பூமிபூஜை ேநற்று நடந்தது.
மடிப்பாக்கத்தில் நடந்த பூமிபூஜைக்கு மண்டல குழு தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். உதவி ஆணையர் முருகன், செயற்பொறியாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ கலந்துகொண்டு பூமிபூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். இதில், மாமன்ற உறுப்பினர்கள் வ.பாபு, ஷெர்லி ஜெய், சமீனா செல்வம், சிவபிரகாசம் மற்றும் திமுக வட்ட செயலாளர்கள் எம்.கே.ஜெய், ம.ஆறுமுகம், ஆரோன், சுரேஷ், ரஞ்ஜித்குமார் மற்றும் தேவேந்திரன், வே.வீ.குமரேசன், செல்வகுமார், ராமகிருஷ்ணன், எஸ்.கோவிந்தன், செல்வம், ராமமூர்த்தி, ராஜி, ராஜேந்திரன், காசி, விமல், பிரகாஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.