இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப் 5 நாள் தனிப்பட்ட பயணமாக நேற்று சீனா புறப்பட்டு சென்றார். இங்கிலாந்தில் 4 ஆண்டுகள் தங்கியிருந்து கடந்த ஆண்டு அக்டோபரில் பாகிஸ்தான் திரும்பிய பின்னர் நவாஸ் ஷெரிப் செல்லும் முதல் சர்வதேச பயணமாகும். இந்த சீன பயணத்தின்போது நவாஸ் மருத்துவ பரிசோதனைக்கு மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளன. மேலும் பஞ்சாப் மாகாண மேம்பாட்டு பணிகளுக்காக சீன நிறுவனங்களின் உரிமையாளர்களை சந்திப்பதற்கும் நவாஸ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.