Friday, July 18, 2025
Home செய்திகள்இந்தியா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த உற்சவம் தங்கத்தேரில் மலையப்பசுவாமி பவனி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த உற்சவம் தங்கத்தேரில் மலையப்பசுவாமி பவனி

by Karthik Yash

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவம் நேற்றுமுன்தினம் தொடங்கியது. வசந்த உற்சவத்தின் 2ம் நாளான நேற்று அதிகாலை ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 8 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி தங்கதேரில் எழுந்தருளி, மாடவீதிகளில் பவனி வந்தார். தங்க தேரில் தரிசிப்பதன் மூலம் லட்சுமி தேவி அருள் செல்வம், இன்பம், ஆசீர்வாதம், அனைத்து தானியங்கள் மற்றும் ஏழுமலையானின் அருள் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்பிக்கை. மாடவீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி முழக்கமிட்டு சுவாமியை வணங்கினர். மேலும் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

இதையடுத்து மதியம் வசந்த மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமிக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், தேன் மற்றும் மூலிகை திரவியங்களைக் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. வசந்த உற்சவத்தையொட்டி வசந்த மண்டபம் முழுவதும் மனம் கமழும் வண்ண மலர்கள் மற்றும் பலவித பழங்கள், மூலிகை வேர்களை கொண்டு செயற்கை வனம் அமைக்கப்பட்டது. பச்சை மரங்கள், மலர்களுடன் புலி சிறுத்தை, குரங்குகள், நரிகள், பாம்புகள், மயில்கள், வாத்துகள், பறவைகள் ஆகிய பொம்மைகளும் இடம்பெற்றிருந்தது. இது பக்தர்கள் அனைவரையும் கவர்ந்தது. 3வது நாளான நாளை ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi