டெல்லி : அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு பெயர் மாற்றம் செய்யும் முட்டாள்தனமான நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக சீனா ஈடுபடுகிறது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை இந்திய அரசு திட்டவட்டமாக எதிர்க்கிறது என்றும் புதிய பெயர்களை சூட்டுவதன் மூலம் அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு அங்கம் என்பதை மாற்றிவிட முடியாது என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.