புதுச்சேரி: குழந்தைகள் மனதில் சாதி தீ பரவி வருவது யாருமே ஒப்புக் கொள்ளமுடியாத ஒன்று என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புத்தகத்தை எடுக்க வேண்டியவர்கள் கத்தியை எடுத்து திரிகிறார்கள் என்பது வேதனை ஏற்படுத்துகிறது. அறிவாற்றல் மிகுந்த மாணவர்களாக வரவேண்டியவர்கள் அரிவாளை தூக்கி திரிகிறார்கள் என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்திருக்கிறார்.