சென்னை: குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் நாளை காலை 10 மணிக்கு பெற்றோர் விசாரணைக்கு ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விசாரணைக்கு ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விசாரணையின்போது உரிய ஆவணங்களுடன் குழந்தையின் பெற்றோர் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.