வேலூர்: இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேல்மொணவூரில் ரூ.11 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 220-வீடுகளை முதல்வர் திறந்து வைத்தார். இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கான சாவிகளை பயனாளிகளிடம் வழங்கினார். தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் உள்ள 19 முகாம்களில் ரூ.79.70 கோடியில் கட்டப்பட்ட 4,591 புதிய குடியிருப்புகள் திறக்கப்பட்டுள்ளது.