டெல்லி: காவிரி வழக்கை விசாரிக்க இன்றே புதிய அமர்வு ஏற்படுத்தப்படும் என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உறுதி தெரிவித்துள்ளார். 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வை இன்றே அமைப்பதாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்துள்ளார். காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வழக்கறிஞர் முகுல் ரோத்தகி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.