சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவு: இன்று நினைவில்கொள்ளத் தக்கதோர் நாள். டாக்டர் ஈ.ஆர்.சி.டேவிதாருக்கு மரியாதை செய்யும் விதமாக ஒவ்வோராண்டும் அக்டோபர் 7-ம் நாளினை நீலகிரி வரையாடு நாள் ஆக அர்ப்பணிக்கிறோம். டாக்டர் டேவிதார் தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு குறித்த ஆய்வினை 1975-லேயே முன்னெடுத்த முன்னோடி ஆவார். நீலிகிரி வரையாடு திட்டத்தையும் வருகிற அக்டோபர் 12ம் நாள் தொடங்கி வைக்க இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.