சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் சு.வெங்கடேசன், சச்சிதானந்தம் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்தனர். சி.பி.எம். சார்பில் மதுரையில் சு.வெங்கடேசன், திண்டுக்கல்லில் சச்சிதானந்தம் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வேட்பாளர்கள் இருவரும் வாழ்த்து பெற்றனர். வேட்பாளர்களுடன் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் ராமகிருஷ்ணனும் முதல்வரை சந்தித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சிபிஎம் வேட்பாளர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.!!
previous post