Monday, May 27, 2024
Home » சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவனடியாரை தாக்கிய தீட்சிதர் கைது செய்ய கோரி போஸ்டர்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவனடியாரை தாக்கிய தீட்சிதர் கைது செய்ய கோரி போஸ்டர்

by Arun Kumar

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்ற சிவனடியாரை தாக்கிய தீட்சிதரை கைது செய்யக்கோரி போஸ்டர் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அண்ணாமலை நகர் அடுத்துள்ள சிவபுரியை சேர்ந்த சிவனடியார் கார்‍வண்ணன் கடந்த 21ம் தேதி சென்றார். அப்போது கோயிலின் 21 படிக்கட்டு அருகே சென்றபோது கோயில் தீட்சிதர்களுக்கும், கார் வண்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கோயில் தீட்சிதர்கள் சிலர் கார்வண்ணனை நெட்டி தள்ளி தாக்கியுள்ளனர். தீட்சிதர் ஒருவர் அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.

இதுகுறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் கார்வண்ணன் புகார் செய்து இருந்தார். இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் நேற்று சிதம்பரம் பேருந்து நிலையம் மற்றும் நகரம் முழுவதும் பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் சிவபுரி பகுதியை சேர்ந்த சிவனடியார் கார்‍வண்ணன், சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தாக்கியதை கண்டித்தும், தீட்சிதர்களை கைது செய்ய வலியுறுத்தியும் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில், 4 நாட்களுக்கு பிறகு நேற்று காலை கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

You may also like

Leave a Comment

five × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi