Thursday, May 16, 2024
Home » சிக்கன் பப்சில் கிடந்த பல்லி: அதிரடி காட்டிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்

சிக்கன் பப்சில் கிடந்த பல்லி: அதிரடி காட்டிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்

by Suresh

நீலகிரி: குன்னூரில் சிக்கன் பப்ஸ் வாங்கி சாப்பிட்ட மாணவன் அதிலிருந்த பல்லியை பார்த்து அதிர்ச்சியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் உடனடியாக இறங்கிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைக்கு பூட்டு போட்டு சென்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர், உபதலை கிராமத்தை சேர்ந்தவர் விஜயக்குமார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று குன்னூர் அருகே உள்ள பாய்ஸ் கம்பெனி பகுதியில் உள்ள கடையில் 4 சிக்கன் பப்ஸ் வாங்கி தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

தனது மனைவி மற்றும் மகன் உட்பட 3 பேரும் சிக்கன் பப்ஸ்களை சாப்பிட்டுள்ளார். அவரது மகன் சிக்கன் பப்ஸை சாப்பிடும் போது அதில் சிறிய பல்லி இருந்துள்ளது. அதனை முதலில் கொத்தமல்லி என நினைத்துள்ளனர். பின்னர் சிக்கன் பப்ஸில் கிடந்தது பல்லி என தெரியவந்துள்ளது.

இதையடுத்து மூவரும் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று இன்று காலை வீடு திரும்பினர். சிக்கன் பப்ஸில் பல்லி கிடந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு கடைக்கு பூட்டு போட்டு சென்றனர்.

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டு சென்றனர். மாவட்ட ஆட்சியரின் விசாரணைக்கு பிறகு கடைக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

5 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi