சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரி விடுதியை நீதித்துறைக்கு வழங்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார். மருத்துவ மாணவர்களுக்கான விடுதியை நீதிதுறைக்கு வழங்கப்போவதாக வரும் தகவல் கவலையளிக்கிறது. விடுதியை மாற்றும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் தெரிவித்திருக்கிறார்.