சென்னை: சென்னையில் வி.பி.சிங்குக்கு சிலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்ததற்கு பல்வேறு கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். வி.பி.சிங்கை இந்திய வரலாறு மறக்கக்கூடாது என்று ஜவாஹிருல்லா கூறினார். தமிழ்நாட்டுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் சென்னையில் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்ததற்கு நன்றி என சதன் திருமலைக்குமார் தெரிவித்தார். திராவிட இயக்கம், கலைஞரை நேசித்த வி.பி.சிங்குக்கு சிலை வைப்பதை வரவேற்கிறேன் என்று நாகை மாலி கூறினார். சென்னையில் வி.பி.சிங்குக்கு சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு பா.ஜ.க. வரவேற்பு தெரிவித்திருக்கிறது. வி.பி.சிங் நினைவை போற்றும் வகையில் சென்னையில் அவரது முழுஉருவ கம்பீர சிலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.