சென்னை: சென்னையில் இருந்து புனே சென்ற ரயிலில் உணவு ஒவ்வாமை காரணமாக 40 பயணிகளுக்கு நள்ளிரவில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. நள்ளிரவில் ரயிலில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட பயணிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 40 பயணிகளுக்கும் ஒரே நேரத்தில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.