சென்னை: சென்னை பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் தனியார் கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். மாணவி ஜெயாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு பொறியியல் படித்து வரும் மாணவி ஜெயா தற்கொலை குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.