சென்னை: 2015-ல் அதிமுக ஆட்சிக்காலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் மோசடி செய்த குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வேகவதி ஆற்றங்கரையோரம் ரூ.182 கோடி செலவில் கட்டிய வீடுகள் மோசடி செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. ஐஐடி நிபுணர்கள், கட்டிடம் நிபுணர்கள் ஆய்வில் 2112 வீடுகள் முறையாக கட்டப்படாமல் முறைகேடு செய்து உறுதி செய்யப்பட்டது. அப்போது வேலை பார்த்த குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், ஒப்பந்ததாரர் என 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.