சென்னை : சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். திருச்சியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த நிலையில், இன்று ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் ஒபிஎஸ் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.