சென்னை: சென்னை எண்ணூர் கோரமண்டல் உரத் தொழிற்சாலை முன் 5ஆவது நாளாக பொதுமக்கள் இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மூச்சுத்திணல் ஏற்பட்டோருக்கு இழப்பீடு, ஆய்வு செய்த பின் ஆலையை திறக்க மக்கள் வலியுறுத்தல். பெரியகுப்பம், சின்னகுப்பம் கிராம மக்கள் கோரமண்டல் தொழிற்சாலை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். எண்ணூர் கோரமண்டல் தொழிற்சாலையில் கடந்த 27ல் அமோனியா வாயு கசிந்து பலர் பாதிக்கப்பட்டனர்.