சென்னை: சென்னை வேளச்சேரியில் மதுபோதையில் ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டிய புழல் சிறைக் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மதுபோதையில் காவலர் ஹரிஹரன் ஓட்டிச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம், ரெட்டேரியில் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தை தொடர்ந்து மாதவரம் போலீசார் நடத்திய விசாரணையில் காவலர் மதுபோதையில் இருந்தது தெரிய வந்ததை அடுத்து புழல் சிறைக் காவலர் ஹரிஹரன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.