சென்னை : சென்னை பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் முதற்கட்டமாக 521 மாணவர்கள் கல்விச் சுற்றுலா செல்வதை முன்னிட்டு, மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று 108.072023) ரிப்பன் கட்டிட வளாகத்தில் இருந்து கல்விச் சுற்றுலா செல்லும் மாணவர்களிடம் கலந்துரையாடி அவர்கள் செல்லும் பேருந்துகளை கொடியசைத்து வழியனுப்பிவைத்தார்,
2023-24ம் நிதியாண்டிற்கான பெருநகர சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையின்போது, மேயர் அவர்களின் உரையில் அறிவிப்பு 23ல் பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி மட்டுமல்லாமல் பள்ளிப் படிப்பின்போதே உலகளாவிய அறிவைப் பெறும் நோக்கில் கல்விர் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும், 2023-24ம் கல்வியாண்டில் சென்னை பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியரின் பள்ளி கல்விக்குப் பின் அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் ரூ.11 இலட்சம் மதிப்பீட்டில் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் மேயர் அவர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், 2023-23ஆம் கல்வியாண்டில் சென்னை பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் சுமார் 5200 மாணவர்களை பிர்லா கோளரங்கம் பெரியார் அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப மையம், அண்ணா நூற்றாண்டு நூலகம் (அல்லது) அம்பத்தூர் மாதவரம் மற்றும் சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் தொழிற்சாலைகள் (அல்லது) சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்கள் (அல்லது) தக்க்ஷினா சித்ரா அருங்காட்சியகம் போன்ற இடங்களைப் பார்வையிட ஸுயை மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான 5 மாதங்களில் 15 கட்டங்களாக அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது.
இதில் முதற்கட்டமாக, டி.எச். சாலை சென்னை மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 270 மாணவர்கள், பட்டேல் நகர் சென்னை மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 100 மாணவர்கள், கல்யாணபுரம் சென்னை மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 50 மாணவர்கள் மற்றும் அப்பாசாமி லேன் சென்னை மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 101 மாணவர்கள் என மொத்தம் 521 மாணவர்கள் 10 பேருந்துகளில் பிர்லா கோளரங்கம். பெரியார் அறிவியல் தொழிற்நுட்ப மையம் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தினைப் பார்வையிட இன்று (08.072023) அழைத்துச் செல்லப்படுகின்றனர்.இதர மாணவர்கள் வருகின்ற நவம்பர் வரை 14 கட்டங்களாக கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.