சென்னை: சென்னை மேடவாக்கத்தில் நேற்று கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மாணவர் கைது செய்யப்பட்டார். கல்லூரி மாணவியை குத்திவிட்டு தப்பிய இளைஞர் வசந்த், நீலாங்கரை அருகே கைது செய்யப்பட்டார். ஒரு தலைக் காதலால் இளைஞர் சரமாரியாக கத்தியால் குத்தியதில் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.