சென்னை: சென்னை கடற்கரை வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் வழித்தடத்தை தமிழ்நாடு அரசிடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு தற்போது வணிக திட்ட அறிக்கை தயாரித்து வருகிறது, தமிழ்நாடு அரசு எப்போது கேட்கிறதோ, அப்போது பறக்கும் ரயில் வழித்தடம் முழுமையாக ஒப்படைக்கப்படும் என ஆர்.என்.சிங் பேட்டியளித்துள்ளார்.