Sunday, May 19, 2024
Home » செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி வளாகத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கான நேரடி சேர்க்கை முகாம்: 21ம் தேதி நடைபெறுகிறது

செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி வளாகத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கான நேரடி சேர்க்கை முகாம்: 21ம் தேதி நடைபெறுகிறது

by Karthik Yash

திருவள்ளூர்: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை (பயிற்சிப்பிரிவு) சார்பாக தொழிற்பழகுநர் ஆள் சேர்ப்பு முகாம் வருகிற 21ம் தேதி காலை 9 மணியளவில் செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பல்வேறு தொழிற்பிரிவுகளை சார்ந்த ஐடிஐ பயிற்சியாளர்களுக்கு மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.
இம்முகாமில் என்சிவிடி, எஸ்சிவிடி முறையில் கல்வி பயின்ற பயிற்சியாளர்கள், தொழிற் பள்ளிகளில் பயிற்சி முடித்தவர்கள், திறன் பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்தவர்கள், எம்இஎஸ் பயிற்சி முடித்தவர்கள் மற்றும் இது நாள் வரை தொழிற்பயிற்சி முடித்து தொழிற்பழகுநர் பயிற்சி பெறாதவர்கள் அசல், தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் பெற்று பயனடையலாம். மேலும் இது தொடர்பான விவரங்களை தெரிந்துக்கொள்ள திருவள்ளூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை நேரிலோ அல்லது ricentreambattur@gmail.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது 9444224363, 9486939263 மற்றும் 9444139373 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தொழிற்பழகுநர் முகாமில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

17 − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi