சென்னை: செக் மோசடி வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது செய்யப்பட்டார். அல்லு அர்ஜூனை வைத்து தயாரித்த படத்திற்காக பிரபல நிறுவனத்தில் ரூ. 1.70 கோடி கடன் பெற்ற நிலையில், திரும்ப அளிக்கவில்லை என புகார் அளிக்கப்பட்டது. சிவசக்தி பாண்டியன் மீது நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி, சிவசக்தி பாண்டியனை கைது செய்து போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
செக் மோசடி வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது..!!
previous post