Thursday, May 16, 2024
Home » மலிவு விலைக்கு கடத்தல் பெட்ரோல் விற்ற 500 பங்க் மூடல்: பாகிஸ்தான் அரசு நடவடிக்கை

மலிவு விலைக்கு கடத்தல் பெட்ரோல் விற்ற 500 பங்க் மூடல்: பாகிஸ்தான் அரசு நடவடிக்கை

by Dhanush Kumar

கராச்சி: பாகிஸ்தானை ஆளும் ‘காபந்து அரசு’ சட்ட விரோத ஈரான் பெட்ரோல் விற்ற சுமார் 500 பெட்ரோல் பங்குகளை மூடி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. பாகிஸ்தானில் அரசியல், பொருளாதார நிலை பலவீனமாக உள்ளது. விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண பெட்ரோல் பங்குகளில் சட்டவிரோதமாக ஈரான் பெட்ரோல், டீசல் விற்பதாக காபந்து அரசுக்கு தெரிய வந்தது. அதனையடுத்து அங்கு சட்டவிரோத ஈரான் பெட்ரோல், டீசல் விற்ற சுமார் 500 பங்குகளை மூடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பாகிஸ்தானில் இப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் அந்நாட்டு மதிப்பில் ரூ. 330 ஆகும். ஆனால், ஈரான் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 220 முதல் 230 வரை விற்கப்படுகிறது. பலுசிஸ்தான் மாகாணம் ஈரானுக்கு அருகில் உள்ளதால் அங்கு கடத்தி வரப்படும் ஈரான் பெட்ரோல், டீசல் விற்பனை கொடிகட்டி பறக்கிறது. அங்கிருந்து கராச்சி மற்றும் இதர பகுதிகளுக்கும் பெட்ரோல், டீசல் சட்டவிரோதமாக கொண்டு சென்று விற்கப்படுகிறது. அதையறிந்து நாடு முழுவதும் அதிரடி சோதனையை பாகிஸ்தான் காபந்து அரசு நடத்தி வருகிறது.

You may also like

Leave a Comment

18 − 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi