கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தது. இதுகுறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக சந்தேகத்தின்பேரில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ, இரண்டு கவுன்சிலர்கள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள தோம்கல் எம்எல்ஏ ஜபிகுல் இஸ்லாம், கொல்கத்தா மாநகராட்சி கவுன்சிலர் பாப்ஆதித்யா, பிதாநகர் மாநகராட்சி கவுன்சிலர் தேப்ராஜ் சக்ரபோர்தி ஆகியோரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
திரிணாமுல் எம்எல்ஏ, கவுன்சிலர் வீடுகளில் சிபிஐ ரெய்டு
previous post