ஜன.23: பெட்ரோல் விலை 100.84, டீசல் விலை 92.39-க்கு விற்பனை!
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.84 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் 91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு...
எய்ம்ஸ் முடியாததால் மதுரைக்கு வர மோடிக்கு அச்சமா? மதுராந்தகத்துக்கு பிரசார கூட்டம் மாறியதன் பரபரப்பு பின்னணி
திருப்பரங்குன்றம்: எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல்கட்ட கட்டுமானப் பணிகள் தாமதத்தால், மதுரையில் நடக்கவிருந்த பிரதமர் மோடி கூட்டம் மதுராந்தகத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை சுமார் 224 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளுக்கு கடந்த 2019, ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பல்வேறு இழுத்தடிப்புக்கு...
பொறுமையா இருங்கப்பா... டென்ஷன் பண்ணாதீங்க... விரக்தியில் ஓபிஎஸ்
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று காலை போடியில் உள்ள அலுவலகத்திற்கு ஓபிஎஸ் காரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது செய்தியாளர்கள், அவரிடம், ‘`கூட்டணி குறித்து தங்களின் நிலைப்பாடு என்ன?’’ என்று கேள்வி எழுப்பினர். இதற்கு ஓபிஎஸ், ‘`பொறுமையாக இருங்கள்; சொல்கிறேன்’’ என மழுப்பலாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தேர்தல்...
தவெகவில் கதறி அழும் செங்ஸ்: மாஜி எம்.பி கிண்டல்
கோவை:தவெக உயர்மட்ட மாநில குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள செங்கோட்டையனுக்கு, அக்கட்சியில் உரிய முக்கியத்துவம் அளிக்காமல் இருப்பதால் மாற்றுக்கட்சிக்கு அவர் தாவலாம் என்கிற பரபரப்பான தகவல் வெளியானது. இந்நிலையில், கோவையை சேர்ந்த முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி தனது முகநூல் பக்கத்தில் செங்கோட்டையன் குறித்து பதிவிட்டுள்ளதாவது: சுறுசுறுப்பா இருந்த செங்கோட்டையனே முடங்கிட்டார். அவரது அரசியல் செயல்பாடுகளும், சுதந்திரமும்...
முதுகிலும், நெஞ்சிலும் அதிமுகவுல குத்துறாங்க... மாஜி அமைச்சர் ஒப்பாரி
தியாகதுருகம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மோகன் கலந்து கொண்டு பேசியதாவது: நமக்கான களம் தயாராகி விட்டது, அனைவரும் தேர்தல் களத்திற்கு தயாராகுங்கள். அதிமுகவை, அதன் தலைமையை காயப்படுத்த வேண்டாம். இதை நான் சொல்வதற்கு...
தூத்துக்குடி முள்ளக்காடு கிராமத்தில் ரூ.2292 கோடியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
சென்னை: தூத்துக்குடி முள்ளக்காடு கிராமத்தில் ரூ.2292 கோடி செலவில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முழுவதும் பரவலான தொழில் வளர்ச்சியை உருவாக்கி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முற்போக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த நான்கரை ஆண்டுகளில் தென் மாவட்டங்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக, தூத்துக்குடியில் புதிய...
நிரந்தர நண்பனும் இல்லை... எதிரியும் இல்லை... அண்ணாமலை- டிடிவி.தினகரன் ரகசிய ‘ஸ்கெட்ச்’: அரசியலில் ஓரம் கட்டப்படும் எடப்பாடி
* இனிப்பு கொடுத்து ஆப்பு, அதிமுக-அமமுக கூட்டணி குறித்து பகீர் சேலம்: எடப்பாடிக்கு எதிராக இருந்த டிடிவி தினகரன் திடீரென அதிமுக கூட்டணியில் சேர்ந்தது ஏன்? என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. நீங்கள் தான் முதல்வர் என ஆசைகாட்டி, எடப்பாடியை அரசியலில் இருந்தே ஓரம் கட்ட தீட்டியுள்ள ரகசிய திட்டம் வெளியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து...
தமிழ்நாட்டை மோதல் களமாக்கி அரசியல் ஆதாயம் தேடாதீர்கள்: ஒன்றிய அமைச்சருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்
சென்னை: தமிழ்நாட்டை மோதல் களமாக்கி அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்று ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், திமுக அரசு மற்றும் முதலமைச்சர் குடும்பம் தொடர்பாக விஷமத்தனமான அவதூறு கருத்துகளை வெளியிட்டுள்ளார். சமூகத்தின் ஆறில் ஒரு...
81 கல்லூரிகளில் ஆய்வக வசதி மேம்படுத்த ரூ.9.45 கோடி நிதி: அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்
சென்னை: 81 கல்லூரிகளின் ஆய்வக வசதிகளை மேம்படுத்துவதற்கு ரூ.9.45 கோடி நிதி ஒப்பளிப்புக்கான ஆணைகளை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார். இதுகுறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் நலன் கருதி...