சென்னை: வேளச்சேரியை சேர்ந்த தி கிரஸ்ட் குடியிருப்போர் நல சங்கத்தினர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பீனிக்ஸ் மாலின் செட் பேக் ஏரியாவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் விதிகளை மீறி மேடை அமைத்து தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார்கள். இதுதவிர பீனிக்ஸ் மாலின் மேல்தளத்தில் குடியிருப்புகளை கட்டுவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் வணிக வளாக கட்டுமானங்களை மேற்கொண்டு வருகிறார்கள்என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பீனிக்ஸ் மாலின் மேல்தளத்தில் வர்த்தக கட்டுமானங்கள் மேற்கொள்வதில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளார்.