இந்தியாவில் மட்டுமல்லாமல் கனடா நாட்டிலும் காலை உணவுத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். குழந்தைகள் நன்கு கல்வி பயில, அவர்கள் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்கு செல்லவேண்டும். கனடாவின் புதிய தேசிய பள்ளி உணவுத் திட்டம், குழந்தைகள் பசியுடன் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்யும். மேலும் ஒவ்வொரு மாணவரும் அவர்களின் கற்றல் திறனை சிறந்த முறையில் மேம்படுத்த இது பெரிதளவில் உதவும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். பிரதமரின் இத்தகைய அறிவிப்பு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலை நோக்கு பார்வைக்கு கிடைத்த வெற்றியாகும் என திமுக பெருமிதம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டை பின்பற்றும் கனடா!: பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ..!!
previous post