சென்னை: கல்குவாரி நீரில் மூழ்கி மனைவி, மகன் உயிரிழந்ததால் – பாதிக்கப்பட்ட கணவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் ஆலம்பாடியில் குவாரியில் குளித்த சங்கரின் மனைவி திவ்யா மற்றும் மகன் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். குவாரியில் வேலியிட்டு மூடாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், நிவாரணம் வழங்க கோரியும் சங்கர் வழக்கு தொடர்ந்திருந்தார்.