தேவதானப்பட்டி, நவ 9: தேவதானப்பட்டி அருகே குள்ளப்புரம் பகுதியில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் குவாரி குடியிருப்பு பகுதியில் இருந்த மேற்குவங்காளத்தைச் சேர்ந்த அமர்மேக்தே(24) என்பவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரை தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து வெளிமாநில தொழிலாளர்களை வேலைகளுக்கு சேர்த்துவிடும் ஏஜென்ட், பெரம்பலூர் மாவட்டம் பேரணி கிழக்கு தெருவைச் சேர்ந்த இளங்கோவன்(38) என்பவர் ஜெயமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.