தேனி, நவ. 9: தேனி-அல்லிநகரம் அம்பேத்கார் நடுத்தெருவை சேர்ந்தவர் மணி மனைவி அய்யம்மாள்(45). இவர் கடன் சுமை காரணமாக நேற்று முன்தினம் மதியம் வீட்டில் அரளி விதையை அரைத்து தின்றார். இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அய்யம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அய்யம்மாளின் மகன் கண்ணன் அளித்த புகாரின்பேரில் அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.