டெல்லி : ரயில்வே பணிகளுக்கு ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்டவற்றுக்காக ரூ.60 கோடி லஞ்சம் வாங்கியதாக ரயில்வே அதிகாரிகள் 7 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அசாம், மணிப்பூர் ரயில்வே அதிகாரிகள் ராம்பால், பி.யு.லஷ்கர், ரித்துராஜ் கோகோய், திராஜ் பகவதி, மனோஜ் சய்கியா, மிதுன்தாஸ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அசாமைச் சேர்ந்த பாரதிய இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.60 கோடி லஞ்சம் பெற்றதாக ரயில்வே அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.