Wednesday, May 29, 2024
Home » தாய்ப்பால் எனும் ஜீவாமிர்தம்!

தாய்ப்பால் எனும் ஜீவாமிர்தம்!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

இயன்முறை மருத்துவர் ஜெயஸ்ரீ ஜெயகிருஷ்ணன்

தாய்ப்பால் என்பது தாய் மற்றும் சேய் இருவருக்கும் இடையேயான உறவு மற்றும் உரிமைப் பரிமாற்றம். உயிர் வளர்க்கும் உன்னத செயல்பாடு. இருப்பினும், பணிபுரியும் பெண்கள் தாங்கள் தாய்ப்பாலூட்டுவதற்கான விருப்பத்துக்கும் அவர்களின் வேலையின் கடமைகளுக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்துவது கடினம். ‘சூப்பர் வுமன்’ இல்லத்தரசியாகவும் மற்றும் பணியாற்றுபவராகவும் இருக்கிறார். இந்த இரண்டு பொறுப்புகளுக்கும் இடையில் ஒரு சமநிலையைக் கண்டறிவது அவளுக்கு சவாலான விஷயமாகும். அவர்கள் வீட்டிற்கு வெளியே வேலை செய்வதோடு கூடுதலாக நேரத்தை ஒதுக்கி வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டும், மேலும் அவர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டவும் வேண்டும்.

கேள்விக்கு இடமின்றி, ஊட்டச்சத்து மற்றும் தாய்-சேய் பிணைப்பை எளிதாக்குவதுடன், குழந்தையின் பாதுகாப்பில் தாய்ப்பால் மிக முக்கியமான காரணியாக உள்ளது. WHO இன் கூற்றுப்படி, 6 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளில் 40% மட்டுமே உலகளவில் பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது, இது கவலைக்குரிய விஷயமாகும். 2025 ஆம் ஆண்டளவில், உலக சுகாதார சபையின் தீர்மானம் 6 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளில் குறைந்தது 50% குழந்தைகளுக்கு பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்ற இலக்கை தெளிவாக நிர்ணயித்துள்ளது. இந்த நோக்கத்தை அடைவதற்கு பணியில் தாய்மார்களுக்கு நிறுவனம் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு மிகவும் முக்கியமானது.

இந்த ஆண்டிற்கான உலக தாய்ப்பால் வாரத்தின் (WBW) கருப்பொருள், ‘‘தாய்ப்பால் ஊட்டுதலை ஊக்குவித்தல் – பணிபுரியும் பெற்றோரின் வாழ்வில் மாற்றத்தை
ஏற்படுத்துதல்”, தாய்ப்பால் கொடுப்பதை பாதுகாக்கும், ஆதரிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் அமைப்புகளின் முக்கியத்துவத்தை ஆராய்கிறது. இந்தக் கட்டுரையில், ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் இயன்முறை மருத்துவ நிபுணர் டாக்டர் ஜெய ஜெயகிருஷ்ணன், ஒரு அமைப்பு தாய்ப்பால் கொடுப்பதை எவ்வாறு ஆதரிக்கலாம் என்பதை விளக்குகிறார் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு குறிப்புகளை வழங்குகிறார்.

நிறுவனங்களின் பங்கு:

அ) தாய்ப்பாலூட்டும் இடம் மற்றும் உள்கட்டமைப்பு

பாலூட்டும் அறையானது தேவையான வசதிகளுடன் கூடிய ஒரு பிரத்யேக இடமாக இருக்க வேண்டும், அங்கு அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு பிரத்தியேகமாக பாலூட்டலாம் மற்றும் சேமித்து வைக்கலாம். பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் பகுதி சுத்தமாகவும், அணுக்கள் கூடியதாகவும், பாதுகாப்பாகவும், தனிப்பட்டதாகவும் இருக்க வேண்டும். பணியிடத்தில் தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்க முதலாளிகள் அதிகபட்ச பாலூட்ட இடைவேளை மற்றும் மேலாளர்களுக்கு பயிற்சியும் அளிக்க வேண்டும்.

ஆ) தனிமை, அணுகல் மற்றும் பாதுகாப்பு

தாய்ப்பால் கொடுக்கும் அறை தாய்மார்களுக்கு எளிதாக அணுகக்கூடியதாக இருக்க வேண்டும், கழிவறைகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் மற்றும் பாலூட்டுவதிற்கு தேவையான கருவிகளுடன் பணியிடத்தற்கு அருகில் இருக்க வேண்டும். ஒரு அமைதியான மற்றும் வசதியான சூழ்நிலையில், பெரும்பாலும் வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் நிறைந்ததாவும் இருக்க வேண்டும்; அதை உறுதியும் செய்ய வேண்டும். கூடுதலாக, தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும், எனவே நுழைவாயில்கள் சரியாக மூடப்பட்டிருக்க வேண்டும் மற்றும் வெளியில் இருந்து பார்க்க முடியாதபடி இருக்க வேண்டும்.

பாலூட்டும் தாய்மார்களுக்கு

அ) மகப்பேறு விடுப்பை நீட்டிக்கவும்

இந்திய சட்டத்தின்படி, ஒரு புதிய தாய்க்கு 26 வாரங்கள் வரை ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்புக்கு உரிமை உண்டு. எனவே, உங்கள் குழந்தையுடனான பிணைப்பை வலுப்படுத்த இந்த வாய்ப்பை பயன்படுத்துங்கள். முதல் ஆறு மாதங்களுக்கு, குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று குழந்தை மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இருப்பினும், உங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலின் முழுமையான பாதுகாப்புப் பலன்களை வழங்க இரண்டு வயது வரை நீங்கள் தொடர்ந்து பாலூட்டலாம்.

ஆறு மாத காலத்திற்கு முன் நீங்கள் வேலைக்குத் திரும்ப வேண்டியிருந்தால், பணியிடத்தில் ஒரு நியமிக்கப்பட்ட பாலூட்டும் அறைப் பகுதியை ஏற்பாடு செய்யும்படி உங்கள் முதலாளியிடம் அல்லது மேலாளரிடம் கேட்கலாம், அதனால் உங்கள் குழந்தைக்கு நீங்கள் தொடர்ந்து பாலூட்டலாம்.

ஆ) வேலையில் சாத்தியக்கூறுகள் மற்றும் வரம்புகளை நிறுவுதல்

நீங்கள் வேலை செய்யத் தொடங்கியவுடன், உங்கள் மேலாளரிடம் திட்டமிடல் மற்றும் வீட்டில் இருந்து வேலை செய்யும் மாற்று வழிகளைப் பற்றி விவாதிக்கவும். உங்களின் இடைவேளை நேரங்கள் மற்றும் அலுவலக நேரத்திற்கு பிறகு வேலை செய்தல் என்பது பற்றிய தெளிவான யோசனையை வழங்கவும். இதைச் செய்வதன் மூலம் உங்கள் குழந்தையுடன் அதிக நேரம் விலகியிருப்பதை தவிர்க்கலாம்.

இ) உங்கள் இடைவேளை நேரத்தைப் பயன்படுத்தவும்

நீங்கள் வேலை செய்யும் இடத்திற்கு அருகில் வசிக்கிறீர்கள் என்றால், மதிய உணவின் போது உங்கள் குழந்தைக்கு உணவளிக்க நீங்கள் வீட்டிற்கு செல்லலாம். உங்கள் குழந்தையை குழந்தை காப்பகத்தில் விட்டுச் செல்ல விரும்பினால், இடைவேளையின் போது நீங்கள் பார்வையிடக்கூடிய இடத்தில் அல்லது அருகில் உள்ள ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்.

ஈ) நீங்கள் பாலூட்டும் வழக்கத்தைத் திட்டமிடுங்கள்

உங்கள் குழந்தைக்கு பாலூட்டுவதற்கு தினசரி அட்டவணையை அமைக்கவும். நீங்கள் வேலைக்குச் செல்வதற்கு முன்பும், வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பிறகும் உங்கள் குழந்தைக்கு உணவளிக்கவும். நீங்கள் திரும்பி வருவதற்கு முன்பு குழந்தைக்கு உணவளிக்க வேண்டாம் என்று பராமரிப்பாளரிடம் சொல்லலாம். உங்கள் குழந்தையுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த இது ஒரு சிறந்த அணுகுமுறையாக இருக்கும். வேலை அதிக நேரம் எடுத்தால், தாய்ப்பாலையும் பம்ப் செய்து சேமித்து வைக்கலாம். இது குழந்தைக்கு தடையின்றி தாயின் பாலுக்கான அணுகலை எளிதாக்குகிறது.

உ) இரவில் பாலூட்டி மகிழுங்கள்

நீங்கள் வேலை செய்யத் தொடங்கும் போது, இரவில் உங்கள் குழந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்வது மிகவும் சவாலாக இருக்கலாம். ஆனால் தாயின் அரவணைப்பை குழந்தைக்கு கொடுப்பதற்கு இது நல்ல வாய்ப்பாகும். கூடுதலாக, குழந்தை உங்களிடமிருந்து பகல் நேரத்தில் விலகியிருந்தால், இரவில் கூடுதல் உணவை விரும்பலாம். எனவே, உங்கள் தூக்கச் சுழற்சியில் குறிப்பிடத்தக்க நேரம் உங்கள் குழந்தையை அருகில் வைத்திருங்கள்..

ஊ) உதவிக்கு குடும்பத்தினரையும் நண்பர்களையும் சேர்த்துக்கொள்ளவும்:

ஒரே நேரத்தில் பணி, வீடு, குழந்தை வளர்ப்பு ஆகியவற்றை சமநிலைப்படுத்துவது சவாலாக இருக்கலாம். எல்லாவற்றையும் நீங்களே செய்ய முயற்சிப்பதை விட குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடம் உதவி கேட்கவும். தாய் சோர்வடையும் குழந்தையின் தந்தை உதவலாம். மூத்த குடும்ப உறுப்பினர்கள், உடன்பிறப்புகள் மற்றும் உறவினர்களும் உதவலாம் மற்றும் வீட்டிற்குள் இருக்கும் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளலாம்.

எ) உங்கள் சொந்த வாழ்க்கையும் பார்த்துக்கொள்ளவும்:

உங்கள் குடும்பத்தை ஆதரிக்க, நீங்கள் நிறைய முயற்சி செய்கிறீர்கள். இருப்பினும், உங்கள் சொந்த தேவைகளை கவனித்துக்கொள்வதும் முக்கியம். ஆரோக்கியமாக சாப்பிடவும், நிறைய உடற்பயிற்சி செய்யவும், நிறைய தண்ணீர் குடிக்கவும், ரீசார்ஜ் செய்ய தனியாக நேரத்தை ஒதுக்க முயற்சிக்கவும்.தாய்ப்பாலை ஊக்குவிப்பதற்கான முக்கியமான படி தாய்க்கு அதிகாரம் அளிப்பதாகும். ஏமாற்றத்தைத் தவிர்ப்பதற்கு, தாய்மார்களுக்கான ஆதரவுக் குழுக்களை உருவாக்குவது மிகவும் முக்கியமானது, ஏனெனில் குழந்தைகளின் குறிப்புகளை புரிவதில் அவர்களுக்கு தொடர்ந்து உதவி தேவைப்படுகிறது.

இந்த ஆண்டின் கருப்பொருளுக்கு இணங்க, ஒரு குழந்தைக்கு உணவளிப்பது பாலினங்களுக்கு இடையில் எந்த வித்தியாசமும் தேவை இல்லை. ஒரு குழந்தை அவர்களின் உரிமைகளைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. பம்பரமாக வேலை செய்யும் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு பணியிடத்தில் இருந்து நர்சிங் பிரேக் மற்றும் டே கேர் வசதிகள் போன்ற உதவி தேவைப்படுகிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், தாய்ப்பாலைத் தொடர அனுமதிப்பதன் மூலம் தாய்-சேய் நல்வாழ்வை மேம்படுத்தவும், இவை ஒவ்வொரு பணியிடத்திலும் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்..தாய்ப்பாலூட்டுவதற்கும் தாய்மார்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று உறுதியெடுப்போம்.

You may also like

Leave a Comment

1 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi