Monday, April 29, 2024
Home » மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்: 4 பேருக்கு மறுவாழ்வு

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்: 4 பேருக்கு மறுவாழ்வு

by Francis

சேலம்: சேலம் நரசோதிப்பட்டி பெருமாள் கோயில் மலை அடிவாரத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (52). தொழிலாளி. இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஜெயபிரகாஷ் கடந்த 5ம் தேதி டூவீலரில் குரங்குச்சாவடி அருகே சென்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஜெயபிரகாசுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து ஜெயபிரகாசின் கல்லீரல், இரண்டு சிறுநீரகம், இரண்டு கண்கள் சேலம் அரசு மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டது.அவ்வாறு தானமாக பெறப்பட்ட கல்லீரல் உடனடியாக ெசன்னை அப்போலோ மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனைக்கும், மற்றொன்று கோவை அரசு மருத்துவமனைக்கும், இரண்டு கண்களும் சேலம் அரசு மருத்துவமனையிலும் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு பெறப்பட்ட உடல் உறுப்புகள் மூலம் நான்கு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

1 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi