சென்னை : 7 ஆண்டுகளுக்கு பிறகு போயஸ் கார்டனில் உள்ள புது வீட்டில் குடியேறினார் சசிகலா.போயஸ் கார்டனில் வேதா இல்லம் எதிரே புதிதாக கட்டிய வீட்டில் ஜெயலலிதா பிறந்தநாளான இன்று குடியேறினார் சசிகலா. புதிதாக கட்டியுள்ள பங்களாவுக்கு ஜெயலிலதா இல்லம் என பெயரிட்டுள்ளார் சசிகலா. போயஸ் கார்டன் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் சசிகலா.