சென்னை: நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அகிம்சை சோசலிச கட்சிநிறுவன தலைவர் டி.ரமேஷ், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தேசிய மலரான தாமரை பாஜவுக்கு ஒதுக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தேன். ஆனால் அந்த மனு மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. தாமரை சின்னத்தை ஒதுக்கியதை ரத்து செய்யுமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி, லக்ஷ்மி நாராயணன் அமர்வில் மனுதாரர் சார்பில் முறையிடப்பட்டது. ஆனால் அதை நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
பாஜவுக்கு தாமரை சின்னம் ரத்து கோரிய வழக்கை அவசரமாக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு
previous post