மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைமை பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி அளித்த பேட்டி: அரசியல் சூழலை கொண்டு தலைமை நிர்வாகக்குழு முடிவெடுக்க பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தலைமை நிர்வாகக்குழு கூட்டம் சென்னையில் நடைபெறும். அதில் எங்களுக்கான வாய்ப்பு என்ன என்பதை பற்றி ஆய்வு செய்து முடிவை அறிவிப்போம். பாஜ அல்லாத கூட்டணியில் இடம்பெறுவது என்று முடிவெடுத்துள்ளோம். இந்தியாவின் அரசியல் மரபுகளை நாசம் செய்யும் பாஜ இருக்கும் கூட்டணியில் நிச்சயம் இடம் பெறமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.